For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயேந்திரர் பெயரை கெடுக்கிறது போலீஸ்: பாஜக

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

போலீசைக் கொண்டு சங்கராச்சாரியாரின் பெயரை தமிழக அரசு கெடுத்து வருவதாக பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.

அக் கட்சியின் பொதுச் செயலாளர் சுஷ்மா சுவராஜ் நிருபர்களிடம் பேசுகையில்,

பழமையான மடத்தின் பெயரையும் சங்கராச்சாரியாரின் பெயரையும் நாறடிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்காகபோலீசையும் அரசு எந்திரத்தையும் முழு அளவில் பயன்படுத்தி வருகிறது.

இந்த விஷயத்தில் அரசியல் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடக்குமாறு தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.

குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் போலீஸ் என்ற எல்லையைத் தாண்டி, ஒரு மதத் தலைவரின் மீது மாநில அரசே நேரடியாகத்தாக்குதலில் இறங்கியுள்ளது.

கொலை வழக்கில் அவர் எந்த வாக்குமூலமும் போலீசாரிடம் தரவில்லை. ஆனால், வாக்குமூலம் தந்ததாகவும் கொலையைஒப்புக் கொண்டதாகவும் பொய்யைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த விஷயத்தை மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. அரசியல் சட்டத்தின் 256, 257வது பிரிவுகளைப்பயன்படுத்தி மாநில அரசைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றார் சுஷ்மா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X