For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இனிமேல் பேட்டியெல்லாம் கிடையாது: சங்கர மடம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்பேரில் சங்கர மடம் சார்பில் இனிமேல் பத்திரிக்கையாளர் சந்திப்புகள்நடத்தப்பட மாட்டாது என்று மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர் கூறியுள்ளார்.

சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக சங்கர மடத்தின் சார்பிலான கருத்துக்களை அவ்வப்போதுசெய்தியாளர்களை சந்தித்துக் கூறி வந்தார் சுந்தரேச அய்யர்.

ஆனால், இவரும் இப்போது போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் மாட்டி முழித்து வருகிறார். அத்தோடு,நீங்க தப்பு தப்பா நியூஸ் போட்றீங்க என்றும் பத்திரிக்கையாளர்களை மடத்தின் சார்பில் கடிந்து கொண்டிருந்தார்.

இந் நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுதான் நம்ம கடைசி பிரஸ் மீட். இதுபோன்ற பிரஸ் மீட்களைவைக்க வேண்டாம் என்று உயர்நீதிமன்றம் மடத்தை அறிவுறுத்தியுள்ளது. எனவே இனிமேல் பிரஸ் மீட்நடத்தப்பட மாட்டாது. தேவைப்பட்டால் அறிக்கையாக வழங்கப்படும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X