காஞ்சி மடத்தின் நிலங்கள்: விசாரணை ஆரம்பம்
சென்னை:
காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அதிகாரியாக (ஆர்.டி.ஓ) இருந்த கண்ணன் அந்தப் பதவியில் இருந்து தூக்கப்பட்டுள்ளார்.இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் பிறப்பித்துள்ளார்
அவருக்குப் பதிலாக சென்னை மாநகராட்சியின் மாவட்ட வருவாய் அதிகாரி (நிலங்கள் பிரிவு) ஜெயகாந்தன்நியமிக்கப்பட்டுள்ளார்.
காஞ்சி மடத்தின் நில, புலன்கள் குறித்து விசாரிக்கும் வேலைகளில் ஜெயகாந்தன் இறங்குவார் என்று தெரிகிறது.
மடத்துக்குச் சொந்தமான நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஜெயேந்திரர், விஜயேந்திரர் மற்றும் நிர்வாகிகளின் உறவினர்கள்முறைகேடாகப் பயன்படுத்தி வருவதாகக் குற்றம் சாட்டப்படும் நிலையில் இந்த விசாரணை தொடங்கவுள்ளது.
இதுவரை ஆர்.டி.ஓவாக இருந்த கண்ணன், மடத்தின் நிர்வாகிகளுக்கு நெருக்கமானவர் என்பதால் அவர்தூக்கியடிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை. காத்திருப்போர் பட்டியலில் சும்மா உட்காரவைக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications