அயோத்தியில் மிக பலத்த பாதுகாப்பு
அயோத்தி:
இன்று பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமாகையால், கோயில் நகரங்களான அயோத்தி மற்றும் பைஸாபாத்தில் அசம்பாவிதங்கள் ஏதும்நேராமல் தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு இன்றுடன் 12 ஆண்டுகள் ஆகிறது. இதைக் கொண்டாடும் விதமாக விசுவ இந்து பரிஷத் கர்சேவக்புரத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இஸ்லாமிய அமைப்பினர் இந்த நாளை கறுப்பு தினமாக அனுஷ்டிக்கின்றனர். இதனையொட்டி கடையடைப்பு நடத்த முஸ்லீம்வியாபாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
மாநிலத்தில் அசம்பாவிதம் ஏதும் நேராமல் தடுக்க உத்திரப்பிரதேச அரசு தீவிர போலீஸ் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்துள்ளது.
ஊர்வலங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முக்கிய அதிகாரிகள் தலைமையில் பதற்றம் நிறைந்தபகுதிகளில் கூடுதல் போலீஸ் துருப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இரு தரப்பு மக்களும் வசிக்கும் பகுதிகளில் ரோந்துப் பணிகளில் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாகனங்கள் அனைத்தும்சோதனையிடப்படுகின்றன.












Click it and Unblock the Notifications