இன்று முதல் "மப்பு" விலை உயர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்கப்படும் மது பானங்களின் விலை இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழக அரசே தற்போது தமிழகத்தில் மது பான விற்பனையை மேற்கொண்டு வருகிறது. அரசின் டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம்மது பான விற்பனை நடந்து வருகிறது.
இன்று முதல் மது பானங்களின் விலையை டாஸ்மாக் நிறுவனம் திடீரென உயர்த்தியுள்ளது. ரூ. 2 முதல் ரூ. 10 வரை விலை உயர்வுஅறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி முதல் விலை உயர்வு அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
விலை உயர்வு தொடர்பான தகவல் நேற்று இரவே மண்டல முது நிலை மேலாளர்களுக்கும், மாவட்ட மேலாளர்களுக்கும்அனுப்பப்பட்டு விட்டது. விலை உயர்வு குறித்த பட்டியலை கடைகளில் தொங்க விடுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications