பாரத ரத்னா எம்.எஸ். மரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

M.S.Subbu Lakshmiஇசைக் குயில், பாரதரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமி சென்னை மருத்துவமனையில் நேற்று இரவு மரணமடைந்தார்.

கர்நாடக இசையின் நைட்டிங்கேல் என்று புகழப்பட்டவரும் எம்.எஸ் என்று அன்புடன் அழைக்கப்பட்டவருமான எம்.எஸ்.சுப்புலட்சுமிக்குநவம்பர் 30ம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து சென்னை மயிலாப்பூர் இசபெல்லா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வந்தது. சாதாரண வைரஸ் காய்ச்சல் பின்னர் நிமோனியாவாக மாறியது.

அவருக்கு தரப்பட்ட சிகிச்சை பலனளித்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் சுய நினைவை இழந்தார். சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

அவர் மறைந்தபோது, மகள்கள் ராதா விஸ்வநாதன், விஜயா ராஜேந்திரன், வளர்ப்பு மகன் தியாகராஜன், கணவர் சதாசிவத்தின் உதவியாளர்ஆத்மநாதன் மற்றும் குடும்பத்தினர் அவர் அருகில் இருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+