For Daily Alerts
Just In
கூடங்குளம்: அணு மின் நிலையம் 2007ல் செயல்படும்
டெல்லி:
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்யா ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டு வரும் கூடங்குளம் அணு மின்நிலையம் 2007ம் ஆண்டு முதல் இயங்கத் தொடங்கும் என மக்களவையில் இன்று தெரிவிக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பிரதமர் செயலகத்திற்கான இணை அமைச்சர்பிரித்விராஜ் சவான் பதில் கூறுகையில்,
2,000 மெகாவாட் திறன் கொண்ட இந்த மின் நிலையத்தின் முதலாவது பிரிவு 2007ம் ஆண்டு டிசம்பர் முதல்இயங்கத் தொடங்கும். இதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
இரண்டாவது யூனிட் ரூ. 13,171 கோடி மதிப்பில் தயாராகி வருகிறது. இது டிசம்பர் 2005ம் ஆண்டு தயாராகி விடும்.ஒவ்வொரு யூனிட்டும் தலா 1,000 மெகாவாட் திறன் கொண்ட மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என்று தெரிவித்தார்அவர்.
Comments
Story first published: Wednesday, December 15, 2004, 5:30 [IST]