For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆடிட்டர்: உயர்நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் ஜாமீன் மனு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Jeyendrar ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயேந்திரர்சார்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகியுள்ள ஜெயேந்திரர் அந்த வழக்கில் தாக்கல் செய்த ஜாமீன் மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தை அவர் அணுகியுள்ளார்.

இந் நிலையில், ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்குதல் வழக்கில் அவரது ஜாமீன் மனுவை சென்னை செஷன்ஸ்நீதிமன்றம் நிராகத்து விட்டது. இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.

ஆனால் முதலில் உயர் நீதிமன்றத்தைத்தான் அணுக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. இதையடுத்துஜெயேந்திரர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், என்னிடம் போலீசார் விசாரணை நடத்தி முடித்துவிட்டனர். இனியும் விசாரிக்க ஏதுமில்லை. போலீஸ்விசாரணைக்கு நான் எந்த வகையிலும் தடையாக இருக்கப் போவதில்லை. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டஎனக்கு தொடர்ந்து சிகிச்சை தேவைப்படுகிறது.

குற்றவாளிகளின் அடையாள அணிவகுப்பு கூட நடந்து முடிந்துவிட்டது. ஜாமீன் கொடுத்தால் எங்கும் ஓடிப்போய்விட மாட்டேன். ஜாமீனை எந்த விதத்திலும் தவறாகப் பயன்படுத்த மாட்டேன்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி ஆர்.பாலசுப்ரமணியம் முன்னிலையில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X