மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு போலீஸ் ஹெல்ப் லைன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

த்ரிஷாவின் குளியல் காட்சிகள் மாதிரியான ஆபாசப் படங்கள் இணையதளத்தில் வராமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றுசென்னை போலீஸ் கமிஷனர் நடராஜ் கூறினார்.

பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

நர்ஸ் அனிதா கொலை வழக்கில் குற்றவாளிகளை போலீஸ் படை தீவிரமாகத் தேடி வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய அஸ்வின்தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பதை அறிய பிரேத பரிசோதனை அறிக்கைக்காககாத்திருக்கிறோம்.

இந்த வழக்கு தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீஸார் பெங்களூர் உள்பட பல இடங்களுக்கு சென்றுவிசாரணை மேற்கொண்டு வருகின்றன.

த்ரிஷாவின் குளியல் காட்சிகள் தொடர்பான புகார் எதுவும் எங்களுக்கு வரவில்லை. ஹைதராபாத் போலீசில் அவர் புகார் செய்துஇருப்பதாக பத்திரிக்கைகள் மூலம் தெரிந்து கொண்டோம். இருப்பினும் அது மாதிரியான ஆபாசப் படங்கள் இணைய தளத்தில் வராமல்இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கேமிரா செல்போன்களைப் பயன்படுத்தத் தடைவிதித்தது போல் பொது மக்கள் அதிகம் வந்துசெல்லும் பகுதிகளில் உடனடியாகத் தடை விதிக்க முடியாது.

கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதையொட்டி சென்னை சாந்தோம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, எழும்பூர், லிட்டில் மவுண்ட் ஆகிய பகுதிகளில்உள்ள தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை மாநகர போலீஸ் சார்பில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ஒரு உதவி மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்தொலைபேசி எண்ணும் 100 தான்.

இதற்குத் தகவல் கொடுத்தால் போலீஸாரும், தொண்டு நிறுவனத்தினரும் விரைந்து வந்து மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச்சென்று மருத்துவமனையில் சேர்ப்பார்கள் என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+