தமிழக பாஜகவில் கோஷ்டிப் பூசல் வெடித்தது!
சென்னை:
தமிழக பாஜகவில் கோஷ்டிப் பூசல் வெடித்துள்ளது. அக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து குமாரவேல் ராஜினாமாசெய்துள்ளார்.
அக் கட்சியின் நிர்வாகிகள் நேற்று மாற்றியமைக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளை கட்சியின் மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன்வெளியிட்டார்.
அதில், கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் கட்சியின் பொருளாளராக இருந்து வந்து எஸ்.ஆர்.சேகர் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக சக்கரவர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.இதே போல வேறு சிலரும் மாற்றப்பட்டுள்ளனர்.
பதவி பறிக்கப்பட்டவர்கள் குமாரவேல் கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. இதையடுத்து தனது பொதுச் செயலாளர் பதவியைகுமாரவேல் ராஜினாமா செய்துளளார்.
ஆனால், அவரது ராஜினாமா ஏற்கப்படவில்லை. குமாரவேலை சமாதானப்படுத்தி அவரை தொடர்ந்து பதவியில் இருக்கச் செய்யமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழக பா.ஜ.கவில் இல.கணேசன் கோஷ்டி, ராதாகிருஷ்ணன் கோஷ்டி, குமாரவேல் கோஷ்டி, எச்.ராஜா கோஷ்டி என காங்கிரசுக்கு சிறிதும்சளைக்காமல் பல கோஷ்டிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications