கமிஷன் பார்ட்டியா சுந்தரேச அய்யர்?
சென்னை:
சுந்தரேச அய்யரை போலீசார் அடிக்கடி கூப்பிட்டு விசாரிப்பதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.
இப்போது போலீசாரின் கஸ்டடியில் இருப்பதாகக் கருதப்படும் ரவி சுப்பிரமணியம் போலீசிடம் பிடிபடும் முன் நக்கீரன் நாளிதழுக்குபோபாலில் தனது மறைவிடத்தில் இருந்தபடி தந்துள்ள தொலைபேசி பேட்டியில் கூறியுள்ள மேலும் சில தகவல்கள்:
நான் சங்கர மடத்துக்கு கட்டட காண்ட்ராக்டர் என்ற வகையில் தான் பழக்கமானேன். ஆனால், கடைசியாக ரூ. 1 கோடிக்கும் அதிகமானபில் எனக்கு செட்டில் செய்யப்பட வேண்டியுள்ளது. நான் கட்டித் தந்த கட்டடத்துக்கு இன்னும் பணத்தைத் தரவில்லை.
சுந்தரேச அய்யருக்கு நான் உரிய கமிஷன் தர மறுத்ததால் அந்த பில்லை கிளியர் செய்யாமல் இருந்தார் என்று கூறியுள்ள ரவி, இந்தகொலை விவகாரத்தால் நொந்து போய் தற்கொலைக்கு செய்ய முடிவு செய்ததாகவும் ஆனால் இப்போது அந்த எண்ணத்தைக்கைவிட்டுவிட்டதாகவும் கூறியுள்ளான்.
மேலும் விரைவில் போலீசிடம் சரணடையத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியிருக்கிறான் ரவி.
இந்தப் பேட்டிக்குப் பின் போலீசிடம் ரவி சரணடைந்துவிட்டதாகவே தெரிகிறது. போலீசாருக்கு போபாலில் இருந்து ரவியின் பெயரில் ஒருதற்கொலை மிரட்டல் கடிதம் வந்ததும் நினைவுகூறத்தக்கது.
இப்போது ரவியை போலீஸ் தனது கட்டுப்பாட்டில் வைத்து விசாரிப்பதாகக் கூறப்பட்டாலும் அதை இன்றைய தினம் வரை போலீஸ்உறுதிப்படுத்தவில்லை.
ஆனால், சுந்தரேச அய்யரை போலீசார் ஏன் இப்படி கஜினி முகமது ரேஞ்சுக்கு சளைக்காமல் மீண்டும் மீண்டும் வரவழைத்துவிசாரிக்கின்றனர் என்பதற்கு ரவியின் பேட்டியில் கூறப்பட்டுள்ள கமிஷன் விவகாரமே காரணமாக இருக்கலாம் என்று தெரிகிறது.
மடத்தின் நிதி நிர்வாகத்தை முழுமையாக அவரே கையாண்டார் என்பதால் கொலையாளிகளுக்கு பணம் கூட அய்யருக்குத் தெரியாமல்போயிருக்க வாய்ப்பே இல்லை என்று போலீஸ் நம்புகிறது.
ஜெயேந்திரர் சொன்னார்.. கதையை முடித்தோம்: ரவி
-
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. 0.9 கி.மீ உயரத்தில் நடந்த வானிலை மாற்றம்! சம்பவம் இருக்கு -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும்












Click it and Unblock the Notifications