கமிஷன் பார்ட்டியா சுந்தரேச அய்யர்?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Sundaresa Ayyarசுந்தரேச அய்யரை போலீசார் அடிக்கடி கூப்பிட்டு விசாரிப்பதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.

இப்போது போலீசாரின் கஸ்டடியில் இருப்பதாகக் கருதப்படும் ரவி சுப்பிரமணியம் போலீசிடம் பிடிபடும் முன் நக்கீரன் நாளிதழுக்குபோபாலில் தனது மறைவிடத்தில் இருந்தபடி தந்துள்ள தொலைபேசி பேட்டியில் கூறியுள்ள மேலும் சில தகவல்கள்:

நான் சங்கர மடத்துக்கு கட்டட காண்ட்ராக்டர் என்ற வகையில் தான் பழக்கமானேன். ஆனால், கடைசியாக ரூ. 1 கோடிக்கும் அதிகமானபில் எனக்கு செட்டில் செய்யப்பட வேண்டியுள்ளது. நான் கட்டித் தந்த கட்டடத்துக்கு இன்னும் பணத்தைத் தரவில்லை.

சுந்தரேச அய்யருக்கு நான் உரிய கமிஷன் தர மறுத்ததால் அந்த பில்லை கிளியர் செய்யாமல் இருந்தார் என்று கூறியுள்ள ரவி, இந்தகொலை விவகாரத்தால் நொந்து போய் தற்கொலைக்கு செய்ய முடிவு செய்ததாகவும் ஆனால் இப்போது அந்த எண்ணத்தைக்கைவிட்டுவிட்டதாகவும் கூறியுள்ளான்.

மேலும் விரைவில் போலீசிடம் சரணடையத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியிருக்கிறான் ரவி.

இந்தப் பேட்டிக்குப் பின் போலீசிடம் ரவி சரணடைந்துவிட்டதாகவே தெரிகிறது. போலீசாருக்கு போபாலில் இருந்து ரவியின் பெயரில் ஒருதற்கொலை மிரட்டல் கடிதம் வந்ததும் நினைவுகூறத்தக்கது.

Raviஇப்போது ரவியை போலீஸ் தனது கட்டுப்பாட்டில் வைத்து விசாரிப்பதாகக் கூறப்பட்டாலும் அதை இன்றைய தினம் வரை போலீஸ்உறுதிப்படுத்தவில்லை.

ஆனால், சுந்தரேச அய்யரை போலீசார் ஏன் இப்படி கஜினி முகமது ரேஞ்சுக்கு சளைக்காமல் மீண்டும் மீண்டும் வரவழைத்துவிசாரிக்கின்றனர் என்பதற்கு ரவியின் பேட்டியில் கூறப்பட்டுள்ள கமிஷன் விவகாரமே காரணமாக இருக்கலாம் என்று தெரிகிறது.

மடத்தின் நிதி நிர்வாகத்தை முழுமையாக அவரே கையாண்டார் என்பதால் கொலையாளிகளுக்கு பணம் கூட அய்யருக்குத் தெரியாமல்போயிருக்க வாய்ப்பே இல்லை என்று போலீஸ் நம்புகிறது.

ஜெயேந்திரர் சொன்னார்.. கதையை முடித்தோம்: ரவி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+