கமிஷன் பார்ட்டியா சுந்தரேச அய்யர்?
சென்னை:
சுந்தரேச அய்யரை போலீசார் அடிக்கடி கூப்பிட்டு விசாரிப்பதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.
இப்போது போலீசாரின் கஸ்டடியில் இருப்பதாகக் கருதப்படும் ரவி சுப்பிரமணியம் போலீசிடம் பிடிபடும் முன் நக்கீரன் நாளிதழுக்குபோபாலில் தனது மறைவிடத்தில் இருந்தபடி தந்துள்ள தொலைபேசி பேட்டியில் கூறியுள்ள மேலும் சில தகவல்கள்:
நான் சங்கர மடத்துக்கு கட்டட காண்ட்ராக்டர் என்ற வகையில் தான் பழக்கமானேன். ஆனால், கடைசியாக ரூ. 1 கோடிக்கும் அதிகமானபில் எனக்கு செட்டில் செய்யப்பட வேண்டியுள்ளது. நான் கட்டித் தந்த கட்டடத்துக்கு இன்னும் பணத்தைத் தரவில்லை.
சுந்தரேச அய்யருக்கு நான் உரிய கமிஷன் தர மறுத்ததால் அந்த பில்லை கிளியர் செய்யாமல் இருந்தார் என்று கூறியுள்ள ரவி, இந்தகொலை விவகாரத்தால் நொந்து போய் தற்கொலைக்கு செய்ய முடிவு செய்ததாகவும் ஆனால் இப்போது அந்த எண்ணத்தைக்கைவிட்டுவிட்டதாகவும் கூறியுள்ளான்.
மேலும் விரைவில் போலீசிடம் சரணடையத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியிருக்கிறான் ரவி.
இந்தப் பேட்டிக்குப் பின் போலீசிடம் ரவி சரணடைந்துவிட்டதாகவே தெரிகிறது. போலீசாருக்கு போபாலில் இருந்து ரவியின் பெயரில் ஒருதற்கொலை மிரட்டல் கடிதம் வந்ததும் நினைவுகூறத்தக்கது.
இப்போது ரவியை போலீஸ் தனது கட்டுப்பாட்டில் வைத்து விசாரிப்பதாகக் கூறப்பட்டாலும் அதை இன்றைய தினம் வரை போலீஸ்உறுதிப்படுத்தவில்லை.
ஆனால், சுந்தரேச அய்யரை போலீசார் ஏன் இப்படி கஜினி முகமது ரேஞ்சுக்கு சளைக்காமல் மீண்டும் மீண்டும் வரவழைத்துவிசாரிக்கின்றனர் என்பதற்கு ரவியின் பேட்டியில் கூறப்பட்டுள்ள கமிஷன் விவகாரமே காரணமாக இருக்கலாம் என்று தெரிகிறது.
மடத்தின் நிதி நிர்வாகத்தை முழுமையாக அவரே கையாண்டார் என்பதால் கொலையாளிகளுக்கு பணம் கூட அய்யருக்குத் தெரியாமல்போயிருக்க வாய்ப்பே இல்லை என்று போலீஸ் நம்புகிறது.
ஜெயேந்திரர் சொன்னார்.. கதையை முடித்தோம்: ரவி
-
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்












Click it and Unblock the Notifications