ஆந்திராவில் 200, கேளரத்தில் 86 பேர் பலி
ஹைதராபாத்:
ஆந்திர மாநிலத்தில் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கடல் நீர் புகுந்ததில் 200 பேர் வரை பலியாகியுள்ளனர். மேலும்ஆயிரக்கணக்கானவர்களைக் காணவில்லை. கேரள மாநிலத்தில் 86 பேர் பலியாகிவிட்டனர்.
பிரகாசம் மாவட்டத்தில் 15 பேரும், கிருஷ்ணா மாவட்டத்தில் 25 பேரும், வட கோதாவரி மாவடத்தில் 3 பேரும், நெல்லூர் மாவட்டத்தில் 4பேரும், ஸ்ரீகக்கூலம் மாவட்டத்தில் 5 பேரும் இறந்தனர். சித்தூர், மச்சிலிப்பட்டிணம் ஆகிய கடலோர மாவட்டங்களும் மிக மோசமாகபாதிக்கப்பட்டுள்ளன.
தாழ்வான பகுதிகளில் குடியிருப்பவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதாக ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டிதெரிவித்தார். அவர் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று நேரில் பார்வையிடுகிறார்.
இன்று காலை 6.45 மணியளவில் ஆந்திர கடலோரத்தில் நில நடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கடல் நீர் புகுந்தது. அதே போலதிருப்பதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதே போல மேற்கு வங்கத்திலும் சிட்டகாங் துறைமுகத்தில் ரிக்டர் அளவுகோலில் 7.2 என்ற அளவுக்கு நில நடுக்கமும் அதைத் தொடர்ந்துகடல் கொந்தளிப்பும் ஏற்பட்டதில் நாடியா மாவட்டத்தில் ஒருவர் பலியானார். மேலும் பலரைக் காணவில்லை.
கேரளாவில் 86 பேர் பலி:
கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 67 பேரும், ஆலப்புழாவில் 16 பேரும், எர்ணாகுளத்தில் 3 பேரும் பலியானார்கள்.100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதே போல ஒரிஸ்ஸாவின் கட்டக் துறைமுகப் பகுதியிலும் கடல் நீரில் பலர் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்த மாநிலங்களின் ஒட்டுமொத்த உயிர்ச சேதம் முந்நூறைத் தாண்டும் என்று தெரிகிறது.
-
உத்தரப் பிரதேசம் vs தமிழ்நாடு! லோக்சபா தொகுதி மறுவரையறையில் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? ஷாக் தகவல்! -
பெரும் தலைகளையே ‘போட்டுப் பார்த்த’ வாக்காளர்கள்.. காமராஜர், அண்ணாவை தோற்கடித்த தேர்தல் வரலாறு! -
ரூ.8,000 கூப்பன் கொடுத்தால் வழக்கு பாயும்.. கறார் காட்டிய தேர்தல் ஆணையம்! அதிரடி உத்தரவு! -
வங்கிகளில் தங்க நகையை அடகு வைத்தவர் தவிர வேறு நபர் மீட்க முடியுமா? விதிமுறைகள் சொல்வது இதுதான்! -
Delimitation! தமிழகத்திற்கு மாபெரும் அநீதி! நாளை வீடுகளில் கருப்புக் கொடி போராட்டம்- ஸ்டாலின் -
மயிலாடுதுறை டூ ராமநாதபுரம்.. மழை கொட்டப்போகுது! லிஸ்ட் போட்ட வானிலை மையம்! -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
சிஸ்டமே மாறப்போகுது.. சென்னையின் போக்குவரத்தையே தடம் தெரியாமல் மாற்ற போகும்.. தங்கமான பிளான் -
ஒரு பக்கம் Delimitation.. இன்னொருபுறம் அண்ணா சிலைக்கு மாலை! நாகர்கோவில் மோடி சம்பவம் -
சட்டமன்ற தேர்தல்.. எத்தனை நாள் டாஸ்மாக் விடுமுறை? வெளியான முழு விவரம்! -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. இன்னும் 2 நாட்கள் தான் இருக்கு! உடனே விண்ணப்பிங்க










Click it and Unblock the Notifications