போலி "பட்டதாரி ஆசிரியர்" கைது
சென்னை:
பத்தாவது வகுப்பு மட்டுமே படித்த ஒருவர், கடந்த 6 ஆண்டுகளாக சென்னை மாநகராட்சி மேல் நிலைப்பள்ளியில் ஆசிரியராகப்பணியாற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை திருவொற்றியூர் சாலையில் உள்ள மாநகராட்சி மேல் நிலைப் பள்ளியில் விஜயக்குமார் என்பவர் கடந்த 6 ஆண்டு காலமாகஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
இவரது ஆசிரியர் பயிற்சி பட்டய சான்றிதழை அதிகாரிகள் சோதனை செய்து பார்த்தபோது அது போலியான சான்றிதழ் என்று தெரியவந்தது. இதைத் தொடர்ந்து விஜயக்குமார் மீது போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது.
போலீஸார் விஜயக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தியதில், அவர் 10வது வகுப்பு மட்டுமே படித்தவர் என்பது தெரியவந்தது.ஜேம்ஸ் என்பவர் விஜயக்குமாருக்கு போலி சான்றிதழைத் தயாரித்து தந்துள்ளார். இதற்காக ஜேம்ஸுக்கு, விஜயக்குமார் ரூ. 25,000 பணம்கொடுத்துள்ளார்.
தற்போது ஜேம்ஸையும் போலீஸார் கைது செய்துள்ளனர். பத்தாவது வகுப்பு மட்டுமே படித்த ஒருவர், மாநகராட்சி பள்ளியில் கடந்த 6வருடமாக வேலை பார்த்து வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications