Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்புவுக்கு ஜனவரி 3 வரை சிறை

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

Appuசங்கரராமன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான அப்புவை ஜனவரி 3ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க காஞ்சிபுரம்மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து அவன் கடலூர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டான்.

கடந்த 19ம் தேதி கைது செய்யப்பட்ட அப்புவை இன்று வரை (27ம் தேதி) போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதிஅளித்தது. இதையடுத்து போலீசார் அப்புவை தங்களது காவலில் வைத்து விசாரித்தனர்.

இதையடுத்து இன்று அவனை மீண்டும் காஞ்சி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது அப்புவை ஜனவரி 3ம் தேதி வரைநீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தமராஜன் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து அப்புவுக்கு சிறையில் முதல் வகுப்பு சிறை ஒதுக்க வேண்டும் என அவனது வழக்கறிஞர்கள் கோரினர். ஆனால், இக்கோரிக்கையை நீதிபதி நிராகரித்துவிட்டார்.

பின்னர் அப்பு கடலூர் கொண்டு செல்லப்பட்டான். அங்குள்ள சிறையில் அவன் அடைக்கப்படுகிறான்.

போலீஸ் காவலில் இருந்தபோது அப்பு எந்தவிதமான வாக்குமூலமும் தரவில்லை என அவனது வழக்கறிஞர்கள் நிருபர்களிடம்தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+