தேர்தல் வன்முறை: அமைச்சர் ரகுபதி விடுதலை!
சென்னை:
சென்னை சைதாப்பேட்டை இடைத் தேர்தலின்போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாக போடப்பட்ட வழக்கிலிருந்து மத்திய உள்துறைஇணையமைச்சர் ரகுபதி உள்ளிட்ட 6 திமுகவினரை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
2000ம் ஆண்டு சாைதப்பேட்டை சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடந்தது. திமுக சார்பில் மா.சுப்ரமணியம், அதிமுக சார்பில்நடிகர் ராதாரவியும் போட்டியிட்டனர்.
வாக்குப்பதிவின்போது பெரும் வன்முறை மூண்டது. இதில் அதிமுகவினரைத் தாக்கியதாக ரகுபதி, நெல்லை மாவட்ட திமுக செயலாளர்கருப்பசாமி பாண்டியன், நெல்லை துணை மேயர் விஸ்வநாத பாண்டியன், கல்யாணசுந்தரம், வேலு, மணி உள்ளிட்டோர் மீதுசைதாப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு சைதாப்பேட்டை 23வது நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி உமா மகேஸ்வரி, ரகுபதிஉள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுககள் சரிவர நிரூபிக்கப்படாததால் அனைவரையும் விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications