சுனாமி: பொங்கலுக்குள் 50,000 தற்காலிக வீடுகள்
சென்னை:
![]() |
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொங்கல் தினத்திற்குள் 50,000 தற்காலிக வீடுகள் கட்டித் தரப்படும் என்று தமிழக அரசின்வருவாய் நிர்வாக ஆணையர் சந்தானம் தெரிவித்துள்ளார்.
கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக வீடு கட்டித்தரும் பணி தற்போது நடந்து வருகிறது. நாகப்பட்டினம்மாவட்டத்தில் 18,000 வீடுகள், சென்னையில் 5,500 வீடுகள், கன்னியாகுமரி மாவட்டத்தில் 8,645 வீடுகள், கடலூர்மாவட்டத்தில் 5,000 வீடுகள், விழுப்புரம் மாவட்டத்தில் 4,750 வீடுகள்,
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4,750 வீடுகள், தூத்துக்குடி மாவட்டத்தில் 400 வீடுகள், திருவள்ளுர் மாவட்டத்தில் 2,500 வீடுகள்,திருநெல்வேலியில் 350 வீடுகள், தஞ்சை மாவட்டத்தில் 50 வீடுகள், ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 வீடுகள் உள்பட 50 ஆயிரம்தற்காலிக வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது.
இது குறித்து தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் சந்தானம் நிருபர்களிடம் கூறியதாவது:-
தற்காலிக வீடுகள் கட்டும் பணி பொங்கல் பண்டிகைக்குள் முடிவடையும். இந்த வீடுகள் தனியார் தொண்டு நிறுவனத்தின்உதவியுடன் கட்டப்படுகிறது.
நிரந்தர வீடுகள் கடலில் இருந்து வெகு தொலைவில் அமையதவாறு அவற்றுக்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.
ரூ.600 கோடி செலவில் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் 1 லட்சம் நிரந்தர வீடுகள் கட்டும் பணி விரைவில் தொடங்கும்.
தமிழகம் முழுவதும் 150 தனியார் தொண்டு நிறுவனங்கள் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன. இதில் நாகப்பட்டினம்மாவட்டத்தில் மட்டும் 75 தொண்டு நிறுவனங்கள் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றன என்று கூறினார்.
நாளை பள்ளிகள் திறப்பு:
இதற்கிடையே கடல் கொந்தளிப்பால் மோசமாக பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாளை முதல் பள்ளிகள்வழக்கம்போல் இயங்கும் என்று மாவட்ட கல்வி அதிகாரி ஆரோக்கியசாமி தெரிவித்துள்ளார்.
ஆற்காட்டுத்துரையில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் முக்கிய ஆவணங்கள் அனைத்தும் கடல் நீரில் அடித்துச்செல்லப்பட்டு விட்டதால் இங்கு மட்டும் பள்ளி தொடங்க மேலும் சில காலம் பிடிக்கும் என்றும், மற்ற பள்ளிகளில் நாளை முதல்வகுப்புகள் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
இது கோடைக்காலம் இல்லை.. கோடை மழைக்காலம்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
இட்லி, தோசை கடைகள் தமிழ்நாட்டில் திணறுதா? 28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? மக்கள் அவலம் -
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு













Click it and Unblock the Notifications