விஜயேந்திரர்: விரைவில் ஜாமீன் மனு தாக்கல்
காஞ்சிபுரம்:
விஜயேந்திரரை ஜாமீனில் எடுக்க இன்னும் ஓரிரு நாட்களில் செங்கல்பட்டு அல்லது சென்னையில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படும் என்று சங்கர மட வழக்கறிஞர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
சங்கரராமன் கொலை வழக்கில் விஜயேந்திரர் நேற்று இரவு திடீரென கைது செய்யப்பட்டார். காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல்நீதிபதி உத்தமராஜ் முன்பு ஆஜர்படுத்ப்பட்ட அவர் 15 நாள் காவலில் சென்னை மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டுஅடைக்கப்பட்டார்.
இந் நிலையில், சங்கர மடத்திற்குள் போலீஸார் அத்துமீறி நுழைந்ததாக மட வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக வழக்கறிஞர் தியாகராஜன் கூறுகையில், சங்கர மடத்திற்குள் எந்தவித அனுமதியும்இல்லாமல் போலீஸார் திடீரெனப் புகுந்தனர்.
அப்போது விஜயேந்திரர் பூஜையில் ஈடுபட்டிருந்தார். ஆனால் பூஜையைத் தொடர விடாமல் அவரை வலுக்கட்டாயமாக கைதுசெய்து சென்றனர். கைது செய்தபோதும் வாரண்ட் எதையும் போலீஸார் காட்டவில்லை.
விஜயேந்திரரை ஜாமீனில் எடுப்பது தொடர்பாக செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றம் அல்லது சென்னையில் ஓரிரு நாட்களில்மனுத் தாக்கல் செய்யப்படும். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஜெயேந்திரர் சிறையிலிருந்து விடுதலை ஆனவுடன் அவருடன்கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார் தியாகராஜன்.