குற்றவாளிகளான எம்எல்ஏவின் சகோதரர்கள்
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி பாமக எம்.எல்.ஏ. வேல்முருகனின் இரண்டு சகோதரர்களை கடலூர் 3வது குற்றவியல் நீதிமன்றம்,தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்துள்ளது.
கடலூர் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலராக இருந்த அதிமுகவைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம்கொலை செய்யப்பட்டார். பாமகவில் இருந்து நீக்கப்பட்டு பின்னர் அதிமுகவில் சேர்ந்தவர் இவர்.
இவரது கொலைக்கு பண்ருட்டி பாமக எம்.எல்.ஏ. வேல்முருகன், அவரது சகோதரர்கள் திருமாவளவன், கண்ணன் ஆகியோர்தான்காரணம் என்று கூறி இவர்கள் மீது வெங்கடேசனின் மனைவி சரஸ்வதி குள்ளஞ்சாவடி போலீஸில் புகார் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்த வேல்முருகன் உள்ளிட்ட 3 பேர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தவழக்கில் கைதாகாமல் இருப்பதற்காக வேல்முருகன் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் முன் ஜாமீன் பெற்றார். மற்ற இருவரும்தலைமறைவாக உள்ளனர்.
இந் நிலையில் திருமாவளவன், கண்ணன் ஆகியோரை தேடப்படும் குற்றவாளிகளாக கடலூர் 3வது குற்றவியல் நீதிமன்றம்அறிவித்தது. இதுகுறித்து நீதிபதி இளவரசன் விடுத்த உத்தரவில், பிப்ரவரி 15ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் இருவரும் சரணடையவேண்டும். இல்லாவிட்டால் அவர்களது சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்று கூறினார்.