ஒரு நாள் போலீஸ் காவலில் சுந்தரேச அய்யர்!
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
சங்கர மட மேலாளர் சுந்தரேச அய்யரை ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிமன்றம்அனுமதி அளித்துள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சங்கர மட மேலாளர் சுந்தரேச அய்யரைபோலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி காஞ்சிபுரம் தனிப்படை போலீஸ் சார்பில் காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல்நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது.
சுந்தரேச அய்யரை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி தருமாறு போலீஸ் தரப்பு மனுவில் கோரப்பட்டிருந்தது.
ஆனால் அந்தக் கோக்கையை நிராகத்த நீதிபதி உத்தமராஜன், அய்யரை ஒரு நாள் மட்டும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கஅனுமதித்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications