கலவையைக் கலக்கிய சுழல் விளக்குக் கார்!
கலவை:
ஜெயேந்திரரை சந்திக்க சுழல் விளக்கு பொருத்தப்பட்ட காரில் வந்தவரால் கலவையில் பெரும் பரபரப்புஏற்பட்டது.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜாமீனில் விடுதலையாகியுள்ள ஜெயேந்திரர், கலவையில் உள்ள சங்கர மடத்தில்தங்கியுள்ளார். காணும் பொங்கல் தினமான நேற்று கலவைக்கு ஏராளமான பக்தர்கள் வந்து ஜெயேந்திரரை சந்தித்துஆசி பெற்றுச் சென்றனர்.
இந் நிலையில் சுழல் விளக்குப் பொருத்தப்பட்ட காரில் (பொதுவாக காவல்துறை அதிகாரிகள் பயன்படுத்தும்காரில்) ஒருவர் வந்தார். காரிலிருந்து இறங்கிய அவர் உள்ளே சென்று ஜெயேந்திரரைச் சந்தித்தார். சுமார் ஒரு மணிநேரத்திற்குப் பிறகு அவர் வெளியே வந்தார்.
அவர் யார் என்று தெரியாமல் குழம்பிய செய்தியாளர்கள் அவரிடம் ஓடிச் சென்று நீங்கள் யார், எதற்காகஜெயேந்திரரை சந்தித்தீர்கள், விசாரணை ஏதும் நடந்ததா என்று விசாரித்தனர். ஆனால் அவர் பதிலேதும் கூறாமல்காரில் ஏறிப் பறந்து விட்டார்.
பின்னர் மட நிர்வாகிகளிடம் விசாரித்துப் பார்த்ததில், அவர் ஐ.ஜி.நாராயணன் என்றும் நெய்வேலி லிக்னைட்நிறுவன ஊழல் கண்காணிப்பு அதிகாரி என்றும், ஜெயேந்திரரை சந்தித்து ஆசி பெறவே அவர் வந்தார் என்றும்தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து பரபரப்பு அடங்கியது.
சிபிஐக்கு மாற்றமா?:
இதற்கிடையே ஆந்திராவில் புலனாய்வுத் துறை கண்காணிப்பாளராக இருக்கும் ராமகிருஷ்ணன், டெல்லியில் மத்திய தொழில் பாதுகாப்புபடை அதிகாரியாக இருக்கும் பிரசாந்த் ஆகியோர் காஞ்சி சங்கரமடத்திற்கு வந்தனர்.
சங்கரமடத்தின் உள்ளே ஒரு மணி நேரம் அவர்கள் ஆலோசனை நடத்தினர். ஜெயேந்திரர் மீதான வழக்குகளை சிபிஐக்கு மாற்றுவதுகுறித்து அவர்கள் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.