For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வங்க கடலில் புயல் சின்னம்

By Staff
Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்:

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியிருக்கிறது. இதனால் பாம்பன் துறைமுகத்தில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டுஏற்றப்பட்டது.

ராமேஸ்வரத்தில் இருந்து 1,000 கி.மீ. தொலைவில் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியிருக்கிறது. இதனை பாம்பன்வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கும் வகையில் பாம்பன் துறைமுகத்தில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டுஏற்றப்பட்டது. நடுக் கடலில் திடீரென்று பலத்த காற்றுடன் புயல் தாக்கக் கூடும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் காற்றின் வேகம் வழக்கத்தை விட குறைவாகவே இருந்ததால் ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்றும் வழக்கம் போல் கடலுக்குச்சென்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X