மடத்திற்கு நிலம் வாங்கியதில் முறைகேடு? போலீஸ் விசாரணை
காஞ்சிபுரம்:
காஞ்சிமடத்திற்கு நிலம் வாங்கியதில் முறைகேடு நடந்தததாக எழுந்த புகார் குறித்து தனிப்படை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
நூற்றுக்கணக்கான வருடங்கள் பழமை வாய்ந்த காஞ்சி சங்கர மடம் கடந்த நூற்றாண்டில்தான் தற்போது இருக்கும் இடத்திற்கு வந்தது என்றுகூறப்படுகிறது.
தற்போது மடம் இருக்கும் இடம் காஞ்சிபுரம விஸ்வகர்மா அமைப்பைச் சேர்ந்த சங்கரன் என்பவரது பெயரில் இருந்தது. நெல்காயவைப்பதற்கும், நெல்மூட்டைகளை அடுக்கி வைக்கவும் அந்த நிலம் பயன்படுத்தப்பட்டு வந்தது.
பின்பு சங்கரனிடம் இருந்து மடத்திற்கு நிலம் கை மாறியது. அதனையடுத்து சில தினங்களிலேயே சங்கரன் சுடுதண்ணீரில் விழுந்து இறந்தார்.அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், நிலம் கைமாறியதில் முறைகேடு நடந்திருப்பதாகவும் புகார் கூறப்பட்டதாகத் தெரிகிறது.
இதனையடுத்து இது தொடர்பாக தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications