சங்கரராமன் கொலை: 21ம் தேதி குற்றப் பத்திரிக்கை!
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் வரும் 21ம் தேதி காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல்செய்ப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டியில், சங்கரராமன் கொலை வழக்கில் இதுவரை 200க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம்விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்ட ஆவணங்களை சேகரித்துள்ளோம்.
இந்த வழக்கில் விசாரணை துரிதமாக நடத்தப்பட்டது. விசாரணை கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.
இதையடுத்து வரும் 21ம் தேதி காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிபதி உத்தமராஜன் முன் குற்றப் பத்திரிக்கைதாக்கல் செய்யப்படும் என்று கூறியுள்ளார் பிரேம்குமார்.
குற்றப் பத்திரிக்கையை வரும் 20ம் தேதி வாக்கில் தாக்கல் செய்ய காஞ்சிபுரம் தனிப்படை போலீசார்திட்டமிட்டுள்ளதை நாம் கடந்த வாரத்திலேயே சுட்டிக் காட்டினோம்.












Click it and Unblock the Notifications