அஸ்ஸாம், மேகாலயாவில் இன்று நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
குவஹாத்தி:
அஸ்ஸாம், மேகாலயா மாநிலங்களில் இன்று நில நடுக்கம் ஏற்பட்டது.
காலை 8.33 ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5 என்ற அளவுக்குப் பதிவாகியுள்ளது.
இந்திய-மியான்மார் எல்லையில் இந்த நில நடுக்கத்தின் மையம் இருந்தது. இது சுனாமியை உருவாக்கிய மாபெரும் நிலநடுக்கத்தின்தொடர்ச்சி இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தனியான நில நடுக்கம் என்று அம் மையம் கூறியுள்ளது. நில நடுக்கத்தையடுத்து மக்கள் வீடுகளை விட்டும், கட்டடங்களை விட்டும்வெளியே ஓடினர்.
இதற்கிடையே சுமத்ராவின் அருகே கடலுக்கடியில் ஏற்பட்ட மிக பயங்கரமான பூகம்பத்தைத் தொடர்ந்து ஏற்பட்டு வந்த நிலநடுக்கங்கள்கொஞ்சம் குறைய ஆரம்பித்துள்ளன.












Click it and Unblock the Notifications