பெங்களூர் விசாரணைக்கு தடை: ஜெவின் மனு தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

வருமானத்தை மீறி சொத்து சேர்த்த வழக்கின் விசாரணையை பெங்களூருக்கு மாற்றியதை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்தமனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

கடந்த ஆட்சியில் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் வருமானத்தை மீறி ரூ. 65 கோடி சொத்து சேர்த்ததாக அடுத்து ஆட்சிக்கு வந்த திமுகவழக்குத் தொடர்ந்தது. தனி நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த விசாரணைகள் கேலிக் கூத்தான வகையில் நடந்தன.

இந்த வழக்கில் இருந்து ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.

இதையடுத்து வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில்மனு செய்தார்.

இதனை விசாரித்த நீதிமன்றம் 2003ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, வழக்குவிசாரணையை பெங்களூருக்கு மாற்றியது.

இதையடுத்து பெங்களூரில் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு, வழக்கின் ஆவணங்கள் தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழியாக்கம்செய்யப்பட்டு வருகின்றன.

இதை எதிர்த்து ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் காவிரி, வீரப்பன் விவகாரத்தால் தனக்கு கர்நாடகத்தில்பாதுகாப்பு இருக்காது என்றும், இந்தப் பிரச்சனைகளால் இரு மாநில உறவுகளும் சீராக இல்லாததால், விசாரணையும் நேர்மையாகநடக்காது என்றும் கூறியிருந்தார்.

இதனால் பெங்களூர் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியிருந்தார்.

இந்த மனுவை இன்று தங்களது சேம்பரிலேயே விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், ஜெயலலிதாவின் மனுவை தள்ளுபடி செய்தனர்.இந்த மனு மீதான வழக்கறிஞர்கள் விவாதத்துக்கும் நீதிபதிகள் அனுமதி மறுத்துவிட்டனர்.

ஏற்கனவே இந்த வழக்கை பெங்களூருக்குப் பதிலாக பாண்டிச்சேரிக்கு மாற்றக் கேரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவையும் உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது நினைவுகூறத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+