For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுந்தரேச அய்யர், ரகு மீதும் குண்டர் சட்டம் பாய்கிறது!!

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

Raghuசங்கரராமன் கொலை வழக்கில் இளையவரின் தம்பி ரகு தவிர சங்கர மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யரும் குண்டர் சட்டத்தில்கைதாவார் என்று காஞ்சிபுரம் போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

கொலையாளிகளுக்கு முன்னின்று பணம் பட்டுவாடா செய்ததாக ரகு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதே போல சங்கரராமன் கொலையாளிகளுக்கு மடத்தின் கணக்கில் இருந்து பணம் தந்தது, ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் மீதானதாக்குதல் வழக்கில் கூலிப் படைக்கு பணம் தந்தது, சங்கர மடத்தின் கணக்கு வழக்குகளைத் திருத்தியது ஆகிய குற்றச்சாட்டுகள்பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந் நிலையில் கொலைக் கும்பலைச் சேர்ந்த கதிரவன், சின்னா என்ற ரஜினி, மாட்டு பாஸ்கர், அம்பி என்ற அம்பிகாபதி, மீனாட்சிசுந்தரம், அனில்குமார், அனந்தகுமார் ஆகியோர் குண்டாசில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அடுத்ததாக ரகுவையும், சுந்தரேச அய்யரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க அரசு முடிவு செய்துவிட்டதாக தகவல்கள்வருகின்றன.

இந்த இருவரைத் தவிர சங்கரராமன் கொலை வழக்கில் மேலும் 10 பேரும் குண்டாசில் உள்ளே தள்ளப்படுகின்றனர்.

இந்தப் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டால் ஒரு வருடத்துக்கு ஜாமீனே கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X