For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிவாரண நிதியில் முறைகேடு: திமுக

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி வழங்குவதில் பெரிய அளவில் ஊழலும் முறைகேடும் நடந்துள்ளதாக திமுக தலைவர்கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது:

நிவாரண நிதி வழங்குவதைக் கண்காணிக்க அனைத்துக் கட்சிக் குழுவை அமைக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையைதமிழக அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.

இந் நிலை தொடர்ந்து நீடித்தால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த ஆராய ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம்நடத்தப்படும்.

நிவாரண நிதி வழங்கியதில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது. 616 குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கி விட்டு, 667குடும்பங்களுக்கு வழங்கியதாக கணக்கு எழுதியுள்ளனர்.

அதேபோல் பாலையாறு கிராமத்தில் 1150 கிராமங்களுக்கு நிவாரண நிதி வழங்கி விட்டு, 1500 கிராமங்களுக்கு வழங்கியதாக கணக்குஎழுதியுள்ளனர். கள்ளிமேடு கிராமத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த அரிசியை அதிமுக உறுப்பினரிடம்வழங்கியுள்ளனர் என்று கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X