வேளாங்கண்ணியில் தேர் பவனி
வேளாங்கண்ணி:
சுனாமியால் பாதிக்கப்பட்ட வேளாங்கண்ணியில் சுனாமியின் கோரத் தாக்குதலுக்குப் பிறகு முதல் முறையாக புனித ஆரோக்கியமாதா தேர்பவனி நடந்தது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் சுனாமியின் கோரத் தாக்குதலால் ஊரே சீர்குலைந்து போனது. ஆயிரக்கணக்கானோர் இங்குபலியாகினர். சுனாமித் தாக்குதலுக்குப் பிறகு அலங்கோலமாக காணப்பட்ட வேளாங்கண்ணி தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.
இந் நிலையில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் தேர் பவனி நடந்தது.
இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஆரோக்கிய மாதாவின் சிலைஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
கடற்கரைச் சாலை வழியாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக தேர் பவனி நடந்தது. சுனாமித் தாக்குதலுக்குப் பிறகு இங்கு நடக்கும் முக்கியநிகழ்ச்சி என்பதால் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் ஆலயத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனையும், கூட்டுத் திருப்பலியும் நடந்தது.