For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயேந்திரரை மாட்டிவிட்டது தேவே கெளடா?!

By Staff
Google Oneindia Tamil News

கலவை:

Jeyandrar ஜெயேந்திரர் மீது கொலை வழக்குப் பாய்ந்ததற்கு மாஜி பிரதமர் தேவே கெளடாவும் முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.

சென்னையை அடுத்த ஏனாத்தூரில் சங்கரா மருத்துவக் கல்லூரிக்கு நோ-அப்ஜெக்ஷன் சான்றிதழ் வழங்க தமிழக அரசு இழுத்தடித்தபோதுஅது குறித்து முதல்வர் ஜெயலலிதாவுடன் ஜெயேந்திரர் பேசியுள்ளார்.

ஆனாலும் அந்தச் சான்றிதழ் கிடைக்காமல் போகவே உச்ச நீதிமன்றத்தை அணுகி சான்றிதழ் பெற்றது காஞ்சி மடம்.

இது குறித்து, தன்னைச் சந்தித்த தேவே கெளடாவிடம் சொல்லிப் புலம்பியுள்ளார் ஜெயேந்திரர். ஜெயலலிதாவுக்கு நன்றி விசுவாசமேஇல்லை, இதனால் கர்நாடகத்தில் நடக்கப் போகும் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை தீவிரமாக நடத்தி அவருக்கு தண்டனைவாங்கித் தருமாறு கூறியுள்ளார் ஜெயேந்திரர்.

அப்போது தான் நன்றி என்றால் என்ன என்று ஜெயலலிதாவைப் போன்றவர்களுக்குத் தெரிய வரும் என்று ஜெயேந்திரர் கூற, இதை தனதுமகன் மூலமாக அப்படியே ஜெயலலிதாவுக்கு பாஸ் செய்திருக்கிறார் கெளடா.

(கர்நாடகத்தில் சொத்துக் குவிப்பு வழக்குக்கு முட்டுக் கட்டைகள் போட கெளடா மூலமாக ஜெயலலிதா முயல்வதை நாம் 2 மாதங்களுக்குமுன்பே சுட்டிக் காட்டியிருந்தோம்)

இதையடுத்து ஜெயேந்திரருக்கு பாடம் புகட்ட ஜெயலலிதா தருணம் பார்த்திருந்தார் என்றும், சங்கரராமன் கொலை வழக்கை வைத்துபோலீஸ் அவர் மீது பாய்ந்ததாகவும் கூறப்படுகிறது.

தன்னைச் சந்தித்த மிக முக்கிய அரசியல் பிரமுகரிடம் சங்கராச்சாரியாரே இந்தத் தகவலை எடுத்துச் சொன்னபோது அவரும் சேர்ந்துஅதிர்ந்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X