ஆடிட்டர் வழக்கு: முன் ஜாமீன் கோரும் விஜயேந்திரர்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் கைதாவதில் இருந்து தப்ப முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளார் விஜயேந்திரர்.
சங்கரராமன் கொலை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஆடிட்டர் வழக்கிலும் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால்அவர் மீண்டும் கைதாக உள்ளார்.
இதைத் தவிர்க்க முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார் விஜயேந்திரர். அதில், அப்புவும், ரவி சுப்பிரமணியமும்கொடுத்துள்ள வாக்குமூலத்ன் அடிப்படையில் என்னையும் இந்த வழக்கில் கைது செய்ய முயற்சி நடக்கிறது, எனவே முன் ஜாமீன்வழங்க வேண்டும் என்று விஜயேந்திரர் கூறியுள்ளார்.
இந்த மனு வரும் 29ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications