கோவை கலெக்டருக்கு வந்த குண்டு மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை மாவட்ட ஆட்சியர் கோசலராமனுக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணைநடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் கோசலராமனுக்கு ஒரு மொட்டை கடிதம் வந்தது. அதில், கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டு உள்ளிட்டபகுதிகளில் வரும் 14ம் தேதிக்குள் வெடிகுண்டுகள் வெடிக்கும் என்று எழுதப்பட்டிருந்தது.
கடிதத்தில் அனுப்பியவர் பெயரோ, விலாசமோ இல்லை. இந்தக் கடிதம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் கடந்த 1998 பிப்ரவரி 14 ம் தேதி தொடர் குண்டு வெடிப்பு நடந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications