ராணிமேரி: ஸ்டாலினுக்கு குற்றப் பத்திரிக்கை
சென்னை:
கொலை முயற்சி வழக்கில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் உள்பட 15 திமுகவினருக்கு சைதாப்பேட்டை 9வது நீதிமன்றத்தில்குற்றப் பத்திரிக்கை வழங்கப்பட்டது.
சென்னை ராணிமேரி கல்லூரி கட்டடத்தை இடித்து அங்கு தலைமை செயலகம் கட்டப்போவதாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பைஎதிர்த்து அக்கல்லூரி மாணவிகள் தமிழக அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தினர்.
அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக ஸ்டாலின் உட்பட 15 திமுகவினர் ராணிமேரி கல்லூரி வளாகத்திற்குள் போலீஸாரின் தடையைமீறி உள்ளே சென்றனர். இதையடுத்து ஸ்டாலின் உட்பட 15 பேர் மீதும் போலீசார் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருப்பதாவது:
ராணி மேரிக் கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்த வழக்கில் ஸ்டாலினை கைது செய்ய வேளச்சேரியில் உள்ள அவரது வீட்டிற்கு போலீஸார்சென்றனர். அப்போது ஸ்டாலின் வீட்டின் வெளியே இருந்த 100 திமுக தொண்டர்கள் போலீஸாருக்கு எதிராக கோஷமிட்டனர்.
அப்போது வீட்டிலிருந்து ஸ்டாலின், போலீசை உள்ளே விடாதீர்கள். அவர்களை வெளியே தள்ளுங்கள் என்று கூறினார். அதையடுத்துபோலீஸார் ஸ்டாலினை கைது செய்ய முயன்றபோது, போலீஸாரை சிலர் தள்ளிவிட்டனர். போலீஸார் சிலர் தாக்கப்பட்டனர்.
இதற்காக ஸ்டாலின் உள்பட 9 பேர் மீது போலீசாரைக் கொல்ல முயன்ற வழக்கும், வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், சேப்பாக்கம் சுரேஷ்,சின்னமலை மகேஷ், குணசேகரன், சுப்பிரமணியம், சைதை சம்பத் ஆகியோர் கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்தனர் என்றும்வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
இவ்வழக்கை அடுத்த மாதம் 16ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதி மோகன்ராஜ் உத்தரவிட்டார்.
குற்றப் பத்திரிக்கை நகலைப் பெற்றுக் கொண்டு வெளியே வந்த ஸ்டாலின் நிருபர்களிடம், இந்தப் பொய் வழக்கை சட்டரீதியாகஎதிர்கொள்வேன் என்றார்.












Click it and Unblock the Notifications