எல்.கணேசன், 2 திமுக எம்எல்ஏக்கள் கைது
திருச்சி:
திருச்சியில் ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன், மற்றும் 2 திமுக எம்.எல்.ஏக்கள் கைதுசெய்யப்பட்டனர்.
திருச்சி டோல்கேட் அருகே சுமார் 2 ஏக்கர் அரசு நிலம் பல ஆண்டுகளாக பொது மக்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதில்அடுக்கு மாடி வணிக வளாகம் ஒன்று கட்டப்பட்டு இருக்கிறது. இந்த ஆக்கிரமிப்பை அகற்றவும், கட்டடத்தை இடித்து தள்ளவும் தமிழக அரசுஉத்தரவு பிறப்பித்தது.
இதனையடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் வந்தனர். ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள்தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கட்டடத்தை இடிக்க அத் தொகுதி எம்பியான எல். கணேசன், திமுக எம்.எல்.ஏக்கள் அன்பில்பெரியசாமி, சேகரன் ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து போலீஸாருக்கும், பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில் போலீஸார் தடியடி நடத்திகூட்டத்தைக் கலைத்தனர். இதில் 7 பேர் காயமடைந்தனர்.
எல்.கணேசன், அன்பில் பெரியசாமி, சேகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications