ஜெயேந்திரருடன் சகோதரர் சந்திப்பு
கலவை:
கலவையில் தங்கியிருக்கும் ஜெயேந்திரரை அவரது தம்பி விஸ்வநாத அய்யர் இன்று சந்தித்துப் பேசினார்.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்திருக்கும் ஜெயேந்திரர் இப்போது கலவை மடத்தில் தங்கியிருக்கிறார். அவரை முக்கியபிரமுகர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் தினமும் சந்தித்து வருகிறார்கள்.
இந் நிலையில் இன்று ஜெயேந்திரரை அவரது தம்பி விஸ்வநாத அய்யர் சந்தித்துப் பேசினார். பின்னர் நிருபர்களிடம் பேசிய விஸ்வநாதஅய்யர்,
மடத்தில் ஒரு டாக்டர் இருக்கிறார். அவர் ஜெயேந்திரரின் உடல் நலனைக் கவனித்துக் கொள்கிறார். ஜெயேந்திரர் நலமான தோற்றத்துடன்இருக்கிறார் என்று கூறினார்.
முன்னதாக ஜெயேந்திரரை சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் சந்தித்துப் பேசினார். ஜெயேந்திரரின் பக்தர்என்ற முறையில் கலவைக்கு வந்ததாக அவர் கூறினார்.
அதேபோல் நேற்றிரவும் இன்று காலையும் மடத்தின் வழக்கறிஞர் சண்முகம் ஜெயேந்திரரைச் சந்தித்து வழக்கு குறித்து ஆலோசனைநடத்தினார்.












Click it and Unblock the Notifications