49 இன்ஸ்பெக்டர்களுக்கு டிஎஸ்பி பதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் 49 போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு டி.எஸ்.பியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையில் கடந்த 1979ம் ஆண்டில் சேர்ந்த 250 பேரில் 36 பேருக்கு இன்ஸ்பெக்டர் பதவியிலிருந்து டி.எஸ்.பியாக பதவி உயர்வுஅறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 73 மற்றும் 76ம் ஆண்டுகளில் சப்-இன்ஸ்பெக்டர்களாகத் தேர்வு செய்யப்பட்டு இதுவரை இன்ஸ்பெக்டர்களாக பதவி வகித்த13 பேருக்கும் டி.எஸ்.பியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இவர்களில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம்,திருநெல்வேலி ஆகிய நகரங்களில் பணிபுரிய இருப்பவர்கள் உதவிகமிஷ்னர்களாகவும், ஊரக பகுதிகளில் பணிபுரிய இருப்பவர்கள் டி.எஸ்.பிக்களாகவும் இருப்பர்.
இதற்கிடையே காவல்துறையில் 25 ஆண்டுகள் வேலை பார்த்து வரும் 214 எஸ்ஐகளுக்கு இன்னும் பதவி உயர்வே வழங்கப்படவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications