For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"அம்மா"வுடன் கை கோர்க்க தயார்: ராஜேந்தர்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து போட்டியிடத் தயாராக இருப்பதாக லட்சிய திமுக தலைவரும், இயக்குனருமான விஜய டிராஜேந்தர் கூறியுள்ளார்.

லதிமுக தலைவரான அவர் இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

எனது கட்சிக்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு உள்ளது. வரும் சட்டசபைத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவோம்.

தொகுதிக்கு 10,000 ஓட்டுக்களை பெறுவோம். அதிமுகவுடன் சேர்ந்து போட்டியிட தயாராக உள்ளோம். எங்களது பலத்தை அறிந்துஎங்களை அதிமுக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

திமுகவுக்கு எதிரான பிரச்சார பீரங்கியாக நான் இருக்கப் போகிறேன். எனது திறமையைப் பார்த்துத்தான் திமுகவில் ஏழரை ஆண்டுகாலம்கொள்கை பரப்புச் செயலாளர் பதவியை எனக்கு கருணாநிதி கொடுத்தார்.

ராமதாஸ், திருமாவளவன் ஆகியோரின் தமிழ் பற்றுதலை நான் வரவேற்கிறேன். எனது படங்களில் தமிழில்தான் பெயர் சூட்டுவேன்.ஆனால் அவர்களது கோரிக்கையை சட்டமாக்க முடியுமா? அதை அவர்கள் செய்தால் அதை வரவேற்பேன்.

ஆனால் படத்தை ஓட விடமாட்டேன் என்று எச்சரிக்கை விடுப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. அதனால்தான் அதை முதல்வர்ஜெயலலிதா கண்டித்துள்ளர்.

ராமதாஸ், திருமாவளவன் எச்சரிக்கை குறித்து கருணாநதி கருத்து சொல்லாமல் இருப்பது ஏன்? கருத்து சொன்னால் ஓட்டுக்கு வேட்டு வந்துவிடும் என்று பயப்படுகிறாரா?. ஆனால் ஜெயலலிதா துணிச்சல் மிக்கவர். அவரது துணிச்சலை பாராட்டுகிறேன்.

ஜெயேந்திரர் ஜாமீனில் விடுதலையான உடனேயே விஜயேந்திரரை கைது செய்த துணிச்சல் யாருக்கு வரும்? என்றார் ராஜேந்தர்.. ஸாரிவிஜய டி.ராஜேந்தர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X