சட்டமன்றம்: பாமக எம்எல்ஏ காரை சோதனையிட்ட போலீஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சட்டசபைக்கு வந்த பாமக எம்எல்ஏக்களை கோட்டை வாயிலில் நிறுத்தி போலீசார் சோதனையிட்டதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
இன்று காலை சட்டமன்றத்துக்கு பாமக தலைவர் ஜிகே மணி மற்றும் அக் கட்சியின் 5 எம்எல்ஏக்கள் ஒரே காரில்வந்தனர்.
அந்தக் காரை சட்டமன்ற வளாகத்துக்குள் நுழையும் முன்பே போலீசார் தடுத்து நிறுத்தினர். காரை 10 நிமிடத்துக்கும்மேலாக சோதனையிட்டனர். இதனால் கடுப்பான மணி, நாங்கள் எம்எல்ஏக்கள், சட்டசபை தொடங்கப் போகிறது,அப்படி என்ன இந்த காரில் தேடுகிறீர்கள் என்றார்.
ஆனால், அதை காதில் வாங்காத அதிகாரிகள் தொடர்ந்து காரை சோதனையிட்ட வண்ணம் இருந்தனர்.இதையடுத்து காரை அங்கேயே விட்டுவிட்டு எம்எல்ஏக்களுடன் சட்டசபைக்குள் நடந்து சென்றார் மணி.
இன்று இரங்கல் தீர்மானங்களுக்காக அவை கூடியதால் பாமகவினர் இந்தப் பிரச்சனையை சட்டமன்றத்தில்கிளப்பாமல் விட்டுவிட்டனர்.












Click it and Unblock the Notifications