For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அந்தமான்: சுனாமியோடு 38 நாள் போராட்டம்

By Staff
Google Oneindia Tamil News

போர்ட்பிளேர்:

சுனாமி தாக்கி 38 நாட்கள் ஆன நிலையில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் 9 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

அந்தமானில் உள்ள கேம்பெல்பே தீவு சுனாமியால் மோசமாக பாதிக்கப்பட்டது. இத் தீவு இந்தோனேஷியாவில் இருந்து 225 கிலோ மீட்டர்தொலைவில் உள்ளது.

இத் தீவிற்கு மீட்புக் குழுவினர் சென்றனர். அப்போது 5 ஆண்கள், 2 பெண்கள், 2 சிறுமிகள் என 9 பேர் உயிருடன் இருப்பதுகண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள்.

இவர்களில் 7 பேர் உடல் நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்ததால் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். 2 பேர் மட்டும் சுனாமிமுகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மீட்கப்பட்டவர்களில் ஒருவர் நிருபர்களிடம் கூறுகையில்,

நாங்கள் காட்டிலிருந்த தேங்காய், கிழங்கு மற்றும் காட்டுப் பன்றி இறைச்சியை தின்று பசியைப் போக்கினோம். இருந்தாலும் உடல் நிலைமோசமாக பாதிக்கப்பட்டது. மீட்புக் குழுவினர் வருவதில் தாமதம் ஏற்பட்டிருந்தால் நாங்கள் இறந்திருப்போம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X