ரயில்-டிராக்டர் மோதல் பலி 55 ஆக உயர்வு
Subscribe to Oneindia Tamil
ராம்டேக்:
நாக்பூர் அருகே ஆளில்லா ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற டிராக்டர் மீது ரயில் மோதியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 55ஆக உயர்ந்துள்ளது.
நாக்பூரில் இருந்து 30 கி.மீ. தொலைவில், கன்ஹன்- டோங்ரி குர்ட் இடையிலான ரயில் பாதையில் ஆளில்லா ரயில்வே தண்டவாளத்தைடிராக்டர் ஒன்று கடக்க முயன்றது. அப்போது நாக்பூர்- ராம்டேக் இடையே ஓடும் ரயில், டிராக்டர் மீது மோதியது.
இந்த விபத்தில் டிராக்டரில் பயணம் செய்த 55 பேர் பலியாகினர். மேலும் 22 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ராம்டேக்கில்உள்ள மாயோ மருத்துவமனையிலும், காம்ப்டேயில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications