For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டூ வீலர் ஆம்புலன்ஸ்கள்: சென்னையில் அறிமுகம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நாட்டிலேயே முதன் முறையாக சென்னை, டெல்லி, கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் இரு சக்கர ஆம்புலன்ஸ்களைஅபல்லோ மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் நான்கு சக்கர ஆம்புலன்ஸ்கள் வேகமாக செல்வதில் இடையூறு இருப்பதால் ஏராளமானஉயிர்ச் சேதங்கள் ஏற்படுகின்றன. இதைத் தவிர்க்கவே இரு சக்கர ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:

அபல்லோ பர்ஸ்ட் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த வாகனத்தின் ஓட்டுனரும், பின் இருக்கையில் அமர்ந்திருப்பவரும் முதலுதவிசிகிச்சைக்கான பயிற்சியைப் பெற்றிருப்பார்கள். மேலும் எலும்பு முறிவு, இதயத் துடிப்பை சீராக்கும் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளும்அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும்.

இந்த இரு சக்கர ஆம்புலன்ஸ் நோயாளிகளுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளிக்கவும், நான்கு சக்கர வாகனங்களுக்குவழிகாட்டியாகவும் பயன்படும்.

விபத்து நடந்த இடத்திற்கு 4 சக்கர ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்வதில் இருக்கும் சிரமத்தை உணர்ந்து, இந்த இரு சக்கர ஆம்புலன்ஸ்திட்டத்தை அப்பல்லோ மருத்துவமனையின் தேசிய அவசர சிகிச்சைப் பிரிவு இயக்குனர் டாக்டர் ஹரி பிரசாத் உருவாக்கினார்.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகள் தவிர, 4 சக்கர வாகனங்கள் தடை செல்லத் தடை விதிக்கப்பட்ட பகுதிகளிலும் இந்த இரு சக்கரஆம்புலன்ஸ்கள் செல்ல முடியும் என்று தெரிவித்தார்.

முன்னதாக இத்தகைய ஆம்புலன்ஸ் இரண்டை டாக்டர் பிரதாப் ரெட்டி மற்றும் சென்னை மாநகர காவல் துறை ஆணையர் நடராஜ்ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

நடராஜ் பேசுகையில், சென்னையில் 250 அரசு மற்றும் தனியார் ஆம்புலன்ஸ்கள் இருப்பினும் போக்குவரத்து நெரிசல் காரணமாக விபத்துநடக்கும் இடங்களுக்குச் செல்ல தாமதம் ஏற்படுகிறது. இதனால் ஏராளமான உயிரிழப்பு ஏற்படுகிறது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X