சென்னை: நகை கடையில் ரூ.10 லட்சம் கொள்ளை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையிலுள்ள ஒரு நகைக் கடையில் பட்டப் பகலில் கத்தி முனையில் 200 பவுனுக்கும் அதிகமான நகைகள்கொள்ளையடிக்கப்பட்டன.

சென்னை தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் பத்மஸ்ரீ ஜூவல்லரி என்ற நகைக்கடை உள்ளது. இந்த கடைக்கு இன்று காலை 10மணிக்கு 2 மர்ம நபர்கள் வந்தனர். கடை ஊழியர் செந்திலை கத்தி முனையில் டெலிபோன் வயரால் கட்டி வாய்க்குள் துணியைஅடைத்தனர்.

பின்னர் நகைக்கடையில் இருந்த கம்மல், மூக்குத்தி, வளையல் உள்ளிட்ட தங்க, வைர நகைகளை மூட்டையாக கட்டி எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

இது குறித்து தகவலறிந்த நகைக்கடை உரிமையாளர் ராஜசேகர் பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸார்சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 200 பவுனுக்கும் மேலான நகைகள்கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

போலீஸார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தமிழ் படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் சூட்டினால் தமிழகத்தில் எங்கும் திரையிட விட மாட்டோம் என்றார் ராமதாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+