இந்திய பய-ணம்: அக்தர் சேர்க்கப்படுவாரா?
இஸ்லா-மா-பாத்:
இந்திய சுற்றுப் ப-ய-ணத்தில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயீப் அக்த-ருக்கு வாய்ப்பு அளித்தால் நாங்கள் யாரும் விளையாடமாட்டோம் என்று பாகிஸ்தான் அணியை சேர்ந்த முன்னணி கிரிக்கெட் வீரர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் காயம் காரணமாக அக்தருக்கு ஓய்வுதரப்பட்டது. இதையடுத்து பாகிஸ்தான் திரும்பிய அக்தர், அணியின் வெற்றிக்காக தன்னைத் தவிர வேறு யாரும் பாடுபடுவதில்லை என்றுசக வீரர்கள் மீது குற்றம் சாட்டினார்.
இதனால் கோபமடைந்த பாகிஸ்தான் முன்னணி வீரர்கள் இன்சமாம் உல் ஹக் (கேப்டன்), யூசுப் யுஹானா, அப்துல் ரசாக், சகீத் அப்ரிடி,நவேத் உல் ஹசன், சல்மான் பட் ஆகியோர், இந்த மாத இறுதியில் தொடங்கும் இந்திய சுற்றுப் பயணத்தில் அக்தர் இடம் பெற்றால் நாங்கள்யாரும் விளையாட மாட்டோம் என்று அறிவித்துள்ளனர்.
இதனை பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் தி நேஷன் என்ற பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கிடையே அக்தரின் நடவடிக்கைகள் மீதுபாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் சஹாரியார் கானும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.