For Daily Alerts
Just In
இலங்கை சிறையிலிருந்து 3 மீனவர்கள் விடுதலை
ராமேஸ்வரம்:
இலங்கை சிறையில் அடைப்பட்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் 3 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர் இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்டனர். அவர்கள் மீது இலங்கை நீதிமன்றத்தில்வழக்குத் தொடரப்பட்டது.
அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, 4 பேரில் பரமேஸ்வரன், நாகராஜ், ரமேஷ் ஆகியோரைவிடுவிக்க உத்தரவிட்டார். இன்னும் ஒருவரை விடுவிப்பது குறித்து நீதிமன்றம் உத்தரவு ஏதும் பிறப்பிக்காததால் அவர் தொடர்ந்துசிறையிலேயே உள்ளார்.
Comments
Story first published: Saturday, February 5, 2005, 5:30 [IST]