புலிகள் படையிலிருந்து சிறார்கள் விடுவிப்பு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
விடுதலைப் புலிகள் தங்கள் படையிலிருந்து 23 குழந்தைப் போராளிகளை விடுவித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் சுனாமியால் பாதிக்கப்பட்ட இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளில் இருந்து 40 குழந்தைகளை விடுதலைப் புலிகள்தங்கள் இயக்கத்தில் சேர்த்துக் கொண்டதாக யுனிசெப் அமைப்பு குற்றம் சாட்டியது.
இதையடுத்து தங்கள் வசமிருந்த 23 குழந்தைப் போராளிகளை மனித உரிமைகள் அமைப்பிடம் ஒப்படைத்து அவர்கள் மூலமாக அந்தக்குழந்தைகளின் பெற்றோரிடம் அவர்களைச் சேர்க்க நடவடிக்கை எடுத்ததாக விடுதலைப் புலிகள் வெளியிட்ட செய்திக்குறிப்பில்கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications