ஜல்லிக்கட்டுக்கு தடை கோரும் மேனகா காந்தி
சென்னை:
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக எம்.பியுமானமேனகா காந்தி கூறியுள்ளார்.
மிருக வதைத் தடுப்பு ஆர்வலரான மேனகா, இன்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
கோவாவில் ஜனநாயக படுகொலை நடந்திருக்கிறது. மாநில ஆளுநர் சட்ட விதிகளை மீறி பாஜ.க. அரசை கலைத்திருக்கிறார். இந்தவிவகாரத்தில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உடனடியாகத் தலையிட்டு, மீண்டும் பாஜக ஆட்சியை ஏற்படுத்த வேண்டும். அங்குஅமைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் அரசைக் கலைக்க வேண்டும்.
அப்படி செய்தால் தான் அங்கு ஜனநாயகம் மீண்டும் தழைக்கும்.
தமிழகம் உட்பட சில மாநிலங்களில் வீர விளையாட்டு என்று ஜல்லிக்கட்டு நடத்தி மிருகங்களை வதைக்கின்றனர். மகிழ்ச்சியாகக்கொண்டாட வேண்டிய விழாக்களில் தங்களையும் வதைத்துக் கொள்கின்றனர். அதனால் இதுபோன்ற விளையாட்டுக்களைத் தடை செய்யவேண்டும் என்றார் மேனகா.












Click it and Unblock the Notifications