சுனாமி நிவாரணம்: பிரதமருக்கு ஜெ. கடிதம்
சென்னை:
சுனாமி நிவாரணப் பணிகள் அனைத்தும் மாநில அரசுகளின் மூலமே மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், மாநில அரசுகளின் மூலமே சுனாமி நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் ஜனவரி31ம் தேதி அரசு உத்தரவு மூலம் தெரிவித்தது. ஆனால் அந்த உத்தரவிலிருந்து மத்திய அரசு விலகிச் செல்வது போல தெரிகிறது.
எனவே, சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி, நிவாரண உதவிகள் உள்ளிட்டவை மாநில அரசு மூலமாகவேவழங்கப்படுவதை பிரதமர் உறுதி செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா கோரியுள்ளார்.
மீனவர்களுக்கு, படகுகள், வலைகள் வாங்குவதற்குத் தேவையான நிதி வங்கிகள் மூலமாகத்தான் வழங்கப்படும் என சமீபத்தில் மத்தியநிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்திருந்தார்.
இதற்கு ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications