செளதியில் இந்தியரின் தலை துண்டிப்பு
ரியாத்:
செளதி அரேபியாவில் இந்தியரை எரித்துக் கொன்ற இந்தியருக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
முன் விரோதம் காரணமாக கெளதம் கிருஷ்ணா என்ற இந்தியர், சென்னையைச் சேர்ந்த இக்பால் என்பவரை தூங்கிக்கொண்டிருந்தபோது எரித்துக் கொன்றார். விசாரணையில் இக்பால் குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
அதன்படி செளதி அரேபியாவின் தெற்குப் பகுதியிலுள்ள அஷீர் என்ற இடத்தில் கெளதமின் தலை பொதுமக்கள் முன்னிலையில்சீவப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் கடந்த ஜனவரி 1ம் தேதியிலிருந்து செளதி அரேபியாவில் மரண தண்டனை அடைந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆகஉயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு 35 பேரும், அதற்கு முந்தைய ஆண்டு 52 பேரும் செளதி அரேபியாவில் மரண தண்டனைக்கு உள்ளாயினர்.அவர்களில் பெரும்பாலானவர்கள் போதை மருந்து கடத்தலின்போது பிடிப்பட்டவர்கள்.
இஸ்லாம் விதிகள் கடுமையாகப் பின்பற்றப்படும் செளதி அரேபியாவில் போதை மருந்துக் கடத்தல், கொலை, கொள்ளை,கற்பழிப்பு ஆகிய குற்றங்களுக்கு பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது வழக்கமாகும்.












Click it and Unblock the Notifications