குருவாயூர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
குருவாயூர்:
புகழ் பெற்ற குருவாயூர் கோயிலுக்கு மர்ம நபர்கள் சிலர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து கோயிலில் பாதுகாப்புஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
குருவாயூர் கோயிலும், தேவசம் தங்குமிடங்களும் வரும் 13ம் தேதி அதிகாலை 4 முதல் 6 மணிக்குள் வெடிகுண்டு வைத்துதகர்க்கப்படும். மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டே இந்தத் தாக்குதல் நடத்தப்படவிருக்கிறது.முடிந்தால் தடுத்து பாருங்கள் என்று கோயில் நிர்வாக அதிகாரி அனில்குமாருக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது
.ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த அக் கடிதத்தில் கோஷி என்று பெயருடன் சென்னை முகவரி உள்ளது.
போலீஸார் நடத்திய விசாரணையில், கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த முகவரியில் கோஷி என்ற 63 வயது முதியவர் இருக்கிறார்என்பதும், ஆனால் அவருக்கும் இந்தக் கடிதத்துக்கும் தொடர்பு இல்லை என்பதும் தெரிய வந்தது.
அவரது பெயரில் வேறு யாராவது இக் கடிதத்தை எழுதியிருக்கலாம் என்று போலீசார் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications