சுனாமி: குழந்தைகள் பெயரால் மோசடி- 2 பெண்கள் கைது

Subscribe to Oneindia Tamil

வேலூர்:

சுனாமியால் அநாதையான குழந்தைகளைப் பராமரிப்பதாக பொய் சொல்லி அரசிடமிருந்து நிதியுதவி பெற முயன்ற 2 தொண்டுநிறுவனப் பெண்களை போலீஸார் கைது செய்தனர்.

வேலூரைச் சேர்ந்தவர் பத்மினி. இவர் மாவட்ட சமூக நல அலுவலரை அணுகி, தான் தொண்டு நிறுவனம் நடத்தி வருவதாகவும்,சுனாமியால் அநாதைகளாக்கப்பட்ட 5 குழந்தைகளைப் பராமரித்து வருவதாகவும், அதற்கு அரசின் நிதியுதவி தேவை என்றும்கோரியுள்ளார்.

இதைத் தொடர்ந்து அவரிடமிருந்து விண்ணப்பத்தைக் கேட்டுப் பெற்ற சமூக நல அலுவலர், பத்மினியின் பராமரிப்பு இல்லம் குறித்துவிசாத்தார்.

அப்போது, பத்மினி தொண்டு நிறுவனமே நடத்தவில்லை என்று தெரியவந்தது. மேலும், அவரது பாதுகாப்பில் இருந்த 5 குழந்தைகளும்,சுனாமியால் அனாதைகளாக்கப்பட்ட குழந்தைகள் அல்ல என்பதும், பக்கத்து கிராமங்களிலிருந்து வாடகைக்கு கொண்டு வரப்பட்டகுழந்தைகள் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பத்மினி மற்றும் அவருக்கு உதவியாக இருந்த ஜெயசீலிஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

இவர்கள் மீது மோசடி மற்றும் குழந்தைக் கடத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+