For Daily Alerts
Just In
ஜெயேந்திரருடன் ரஜினி நண்பர் சந்திப்பு
கலவை:
கலவையில் தங்கியுள்ள ஜெயேந்திரரை நடிகர் ரஜினிகாந்த்தின் நெருங்கிய நண்பரான பெங்களூர் தொழிலதிபர் ஹரி சந்தித்துப் பேசினார்.
ஜாமீனில் விடுதலையாகியுள்ள ஜெயேந்திரர் கலவை சங்கர மடத்தில் தங்கியுள்ளார். அங்கு தினமும் ஏராளமான பக்தர்கள், ஆதரவாளர்கள்சந்தித்து ஆசி பெற்று வருகிறார்கள்.
நடிகர் ரஜினிகாந்த்தும் ஒருமுறை ஜெயேந்திரரை சந்தித்துப் பேசினார். இந் நிலையில் ரஜினியின் சார்பில் அவரது மிக நெருங்கியநண்பரான பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஹரி ஜெயேந்திரரை சந்தித்துப் பேசினார்.
இவர் ஏற்கனவே கடந்த மாத இறுதியில் தனது குடும்பத்துடன் ஜெயேந்திரரை சந்தித்துவிட்டுச் சென்றார்.
ரஜினியை அரசியலுக்கு இழுக்க ஜெயேந்திரர் தீவிரமாக முயன்றார் என்பதும், அதனால் ஜெயேந்திரர் மீது ஜெயலலிதா கடும் கோபம்கொண்டதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Sunday, February 6, 2005, 5:30 [IST]